அணுசக்தி துறை பணி அறிவிப்பு பெண்களும் விண்ணப்பிக்கலாம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, April 17, 2021

அணுசக்தி துறை பணி அறிவிப்பு பெண்களும் விண்ணப்பிக்கலாம்

கல்பாக்கம், அணுசக்தி துறை பணி, காலியிடங்களுக்கு, ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.


செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில், அணுசக்தி துறையின், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம்இயங்குகிறது. இதன், ஏ குருப் - அறிவியலாளர்கள் நான்கு பேர் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள், 42 பேர், சி குருப் - கிரேன் ஆப்பரேட்டர் டெக்னீஷியன் ஒருவர், நியமிக்கப்பட உள்ளனர்.

மூன்றாம் நிலை ஸ்டெனோகிராபர்கள் நான்கு பேர்; உயர்நிலை கிளெர்க்குகள் எட்டு பேர்; டிரைவர்கள் இரண்டு பேர்; செக்யூரிட்டி காவலர்கள் இரண்டு பேர்; பணி உதவியாளர்கள் 20 பேர்; கேன்டீன் பணியாளர்கள், 15 பேர் என, தற்போது நியமிக்கப்பட உள்ளனர்.உதவித்தொகையுடன் கூடிய பயிற்சியாளர்களாக, இரு வகைகளில், 239 பேர் நியமிக்கப்பட உள்ளனர். 

எழுத்து, நேர்முக உள்ளிட்ட நிலை தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் விண்ணப்பிக்க, தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.இம்மைய www.igcar.gov.in என்ற இணையதளத்தில், நேற்று, விண்ணப்ப பதிவிறக்க அனுமதி அளிக்கப்பட்டது. 

மே, 14 வரை, இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு, 98400 01273 என்ற மொபைல் போன் எண்ணை தொடர்பு கொள்ளவும் என, அணுசக்தி துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment