தனித்தேர்வர்களுக்கான
பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும்
தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் தனித்தேர்வர்களுக்
கான பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என பள்ளிக் கல்வித்
துறை அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு
மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ள
நிலையில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள்
தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில்
தனித்தேர்வர்களுக்கு தேர்வு எப்போது நடைபெறும் என கேள்வி
எழுந்துள்ள நிலையில் அது தொடர்பாக தேர்வுத் துறை அதிகாரி
கள் விளக்கம் அளித்துள்ளனர்.
பிளஸ் 2 வகுப்பு தேர்வு எழுதுவதற்காக தனித்தேர்வர்கள் கட்ட
ணம் செலுத்திக் காத்திருக்கும் நிலையில் விரைவில் அவர்களுக்
கான தேர்வுகள் நடத்தப்படும். அதே வேளையில் கரோனா கட்டுக்
குள் வந்த பிறகு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்
வர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும்.
எனவே தேர்வர்கள் இந்த கால
இடைவெளியில் நன்றாகப் படித்து தேர்வுக்கு தயாராக வேண்டும்.
உதவி மைய எண்: தேர்வு தொடர்பாக தனித்தேர்வர்களுக்கு
சந்தேகங்கள் இருந்தால் பள்ளிக் கல்வித்துறையின் 14417 என்ற
தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்
என அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment