முழுக்க முழுக்க பெண்களுக்கான சேமிப்பு.. ரூ. 29 முதல் தொடங்கும் சூப்பரான முதலீடு திட்டம்! - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, November 20, 2021

முழுக்க முழுக்க பெண்களுக்கான சேமிப்பு.. ரூ. 29 முதல் தொடங்கும் சூப்பரான முதலீடு திட்டம்!

பெண்களுக்கான சேமிப்பு திட்டத்தில் முதலிடத்தில் இருக்கும் சூப்பரான சேமிப்பு திட்டமான எல்.ஐ.சி. ஆதார் ஷீலா திட்டம் குறித்து தான் பார்க்க போகிறோம். 

நீண்ட கால முதலீட்டிற்கான ஒரு சிறந்த நிறுவனம் எல்.ஐ.சி. இங்கு பல்வேறு சேமிப்பு திட்டங்கள், முதலீடு திட்டங்கள், மியூட்சல் ஃபண்ட் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அதில் அதிகம் பெண்களிடம் பிரபலமாக இருக்கும் திட்டம் தான் எல்.ஐ.சி. ஆதார் ஷீலா திட்டம் . 

இந்த திட்டத்தில் 8 முதல் 55 வயதுள்ள பெண்களால் முதலீடு செய்ய முடியும்.

சிறிய தொகையை நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்து லட்சங்களில் லாபம் ஈட்டலாம். 

சுயமாக வாழநினைக்கும் பெண்களுக்கு இத்திட்டம் கைக்கொடுக்கும்.

இத்திட்டத்தில் தினமும் 29 ரூபாய் முதலீடு செய்தாலே போதும், திட்டத்தின் நிறைவில் ரூ.3.97 லட்சம் சம்பாதிக்கலாம். 

இது வாழ்நாள் முதலீடாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் கண்டிபாக தொழில் தொடங்கவும், அவசர தேவைக்கும் இந்த சேமிப்பு பயன்படும். ஆதார் அட்டைகள் வைத்திருக்கும் பெண்களால் மட்டுமே இந்த பாலிசியை பெற முடியும். இந்த திட்டம் பாலிசிதாரருக்கு மட்டுமின்றி, அவர் இறந்த பிறகு அவருடைய குடும்பத்தினருக்கும் சிறந்த பாதுகாப்பினை வழங்குகிறது.இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.75,000 முதல் அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம் .திட்டத்துக்கான முதிர்வு காலம் 10 முதல் 20 ஆண்டுகள். 

ஒருவர் ப்ரீமியத்தை மாதம் ஒருமுறை அல்லது காலாண்டுக்கு ஒரு முறை அல்லது அரையாண்டுக்கு ஒருமுறை செலுத்தலாம். 30 வயதில் நீங்கள் இந்த திட்டத்தில் தினமும் ரூம். 29 முதலீடு செய்ய தொடங்கினால் 20 ஆண்டுகளில் நீங்கள் ரூ. 2,14,696-ஐ முதலீடு செய்வீர்கள் அப்படியென்றால் மெச்சூரிட்டியின் போது ரூ. 3,97,000 உங்கள் கையில் இருக்கும். 

பெண்களுக்காகவே உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் சேர்ந்து முழு பயனை அடையலாம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் இதுப்போன்ற சேமிப்பு கட்டாயம் உதவும். கூடுதல் விவரங்களுக்கு எல்.ஐ.சி ஆன்லைன் தளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment