சார் நாளைக்கு பள்ளிக்கு விடுமுறையா- ட்விட்டரில் கேள்வி எழுப்பிய மாணவருக்கு ஆட்சியர் கொடுத்த அதிர்ச்சி பதில் - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, November 19, 2021

சார் நாளைக்கு பள்ளிக்கு விடுமுறையா- ட்விட்டரில் கேள்வி எழுப்பிய மாணவருக்கு ஆட்சியர் கொடுத்த அதிர்ச்சி பதில்

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு வங்கக் கடலில் சென்னைக்கு சுமார் 100 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. நாளை அதிகாலை சென்னை - புதுச்சேரி பகுதியில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 அதன் காரணமாக நாளை திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன கன மழையும், சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 கனமழையின் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், தருமபுரி, பெரம்பலூர், நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   

செங்கல்பட்டு, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், விருதுநகரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அம்மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டியிடம், 'இன்று பள்ளிக்கு விடுமுறை வழங்கப்படுமா என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். 

அதற்கு அவர், நாளை உன் பெற்றோருடன் வந்து என்னை சந்திக்கவும்' என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, இரண்டு முறை மாணவர் பள்ளி விடுமுறை குறித்து ட்விட்டரில் மேகநாத் ரெட்டியிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கும் பொறுமையாக பதிலளித்திருந்தார் மேகநாத் ரெட்டி.

No comments:

Post a Comment