அஜீரணத் தொல்லையை போக்கணுமா. இதோ உங்களுக்கான வழிமுறை - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, November 20, 2021

அஜீரணத் தொல்லையை போக்கணுமா. இதோ உங்களுக்கான வழிமுறை

அஜீரணத் தொல்லையால் தவிப்பவர்கள் கண்ட கண்ட மருந்தையும் சாப்பிட்டு மேலும் உடல்நலத்தை கெடுத்துக் கொள்வார்கள். 

இதைவிட இயற்கையான வழிமுறையில் சீரகம்-தனியா சூப் செய்து சாப்பிடுங்கள். அருமையான பலன் கிடைக்கும். 

தேவையான பொருட்கள் : 

சீரகம், மல்லி (தனியா) – தலா கால் கப், 

இஞ்சி – சிறிய துண்டு, 

மிளகு – 2 டீஸ்பூன், 

எலுமிச்சைப் பழம் – 2, 

கறிவேப்பிலை – 2 ஆர்க்கு, 

உப்பு – தேவையான அளவு. 

செய்முறை: 

மல்லி (தனியா), சீரகம், மிளகு ஆகியவற்றை ஒன்றாக ஊறவைக்கவும். இத்துடன், கறிவேப்பிலை, தோல் சீவிய இஞ்சி சேர்த்து விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கலந்து, சக்கையை வடிகட்டி எடுத்துவிடவும். 

பிறகு, தேவையான உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, கொதித்ததும் இறக்கவும். எலுமிச்சைச் சாறு சேர்த்து சூடாகப் பரிமாறவும். இந்த சூப் அஜீரணத் தொல்லையை போக்கும்.

No comments:

Post a Comment