காய்கறிகள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை...! - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, April 19, 2022

காய்கறிகள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை...!

காய்கறிகள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை...! 

காய்கறிகளை தேர்ந்தெடுத்து வாங்குவதில் சிலர் கோட்டைவிட வாய்ப்புள்ளது. எனவே காய்கறிகளை தேர்ந்தெடுக்க சில குறிப்புகள் இங்கே:- சிலர் செக்கச் செவேலென சிவந்து, கனிந்திருக்கிற தக்காளி பழங்களை தேடுவார்கள். முழுவதுமாக சிவந்திருக்கும் தக்காளிச்சாறில் அமிலம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். அதனால் பச்சையும் மஞ்சளும் கலந்து செங்காயாக இருக்கும் காய்களுக்கு முதலிடம் கொடுங்கள். உருண்டையாக கெட்டியாக இருக்கும் காய்களாக பார்த்து வாங் குங்கள். முண்டும் முடிச்சுமாக இருந்தால் அதில் சாறு அதிகமாக இருக்குமே தவிர சதைப்பற்று இருக்காது. 


 பச்சைப்பசேலென இருக்கும் வெண்டைக்காய்கள்தான் சிறந்தவை. வெண்டைக்காய் காம்புப்பகுதியில் இருந்துதான் முற்ற துவங்கும். எனவே காம்பை உடைத்துப்பார்த்து வாங்கலாம். உருளை கிழங்கில், முளைவிட்ட காய்களையும் ஆங்காங்கே பச்சை நிறம் பூசியிருக்கும் காய்களையும் ஒதுக்குவது நல்லது. செம்மண்ணில் விளைந்த உருளையில் இனிப்புச்சுவை மிகுந்து இருக்கும். தடித்த காம்புள்ள கத்தரிதான் பிஞ்சு. கத்தரிக்காயில் காம்பு மெலிந்திருந்தால் அவற்றை தவிர்க்கலாம். 


சாம்பாரில் உப்பு அதிகமாகிவிட்டால் அதனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்க்கும் உத்தி ஊரறிந்த ரகசியம். சோற்று உருண்டையைப் போட்டாலும் உப்பு குறைய வாய்ப்பு இருக்கிறது. டீ போடும்போது கடைசியில் சர்க்கரை சேர்ப்பதுதான் வழக்கம். இதையே தலைகீழாக முயற்சிக்கலாம். முதலில் தண்ணீருடன் தேவையான சர்க்கரை சேர்த்து கொதிக்க விடுங்கள். பிறகு டீத்தூள் சேர்த்து வடிகட்டி, சூடான பால் சேர்த்துப் பாருங்கள். டீ திடமாகவும், சுவையாகவும் இருக்கும். இதில் இன்னொரு நல்லதும் இருக்கிறது. 


இப்படி முதலிலேயே சர்க்கரை சேர்ப்பதால் டீத்தூளின் கரை பாத்திரத்தில் ஒட்டாது, பாத்திரத்தைக் கழுவுவது எளிது. வெண்ணெய் காய்ச்சும்போது கறிவேப்பிலை அல்லது முருங்கை இலையைப் போட்டு காய்ச்சுவதுதான் வழக்கம். அதற்கு பதிலாக வெண்ணெய் காய்ச்சி இறக்கும் போது ஒரு ஸ்பூன் வெந்தயத்தையும் போடலாம். இதனால் நெய் மணத்துடன் இருப்பதுடன், கசக்கவும் செய்யாது.

No comments:

Post a Comment