புதுவை சட்டசபையில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் நமச்சிவாயம் பேசினார். அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-
புதுவை அரசுப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். தற்போது மாணவர் சிறப்பு பஸ்களில் ரூ.1 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இனி அந்த பஸ் சேவை இலவசமாக வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.