ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவு வெளியீடு - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, August 9, 2022

ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவு வெளியீடு

ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான பொது நுழைவுத்தேர்வான ஜே.இ.இ. மெயின் தேர்வு 2 அமர்வுகளாக நடத்தப்பட்டிருந்தது. 10.26 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்ததில், 9.05 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் முதல் அமர்வுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் 24 மாணவர்கள் நூற்றுக்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்து உள்ளனர். 
இதில் அதிபட்சமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த தலா 5 பேருக்கு முழு மதிப்பெண் கிடைத்துள்ளது. மேலும் ராஜஸ்தானில் 4 பேரும், உத்தரபிரதேசத்தில் 2 பேரும் 100 மதிப்பெண் பெற்று இருக்கிறார்கள். இவர்களை தவிர அரியானா, மராட்டியம், பீகார், அசாம், பஞ்சாப், கேரளா, கர்நாடகா, ஜார்கண்ட் மாநிலங்களை சேர்ந்த தலா ஒருவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். அதேநேரம் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 5 மாணவர்களின் முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டு இருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment