சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023 - சிறுதானியங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

الخميس، 18 مايو 2023

சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023 - சிறுதானியங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்



சிறுதானியங்களை கொண்டாடி வரும் நாம், கடந்த வாரம் சிறுதானியங்கள் எந்த வகையில் எல்லாம் முக்கியத்துவம் பெறுகிறது என்றும், அது சர்க்கரை நோயாளிகள் அதிக அளவு விரும்பும் உணவு என்பதை பார்த்தோம். 
இந்த வாரம் உடல் ஆரோக்கியத்தில் சிறுதானியங்களின் பங்கு குறித்த விவரங்களை விரிவாக காண்போம். ஆஸ்துமாவை குறைக்கும் சிறுதானியங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் கிருமிகளின் வளர்ச்சியினை தடுக்கின்றது. பெருங்குடலில் செயல்பாட்டை சீராக்குகிறது. உடல் நலத்திற்கு ஏதுவான கிருமிகளின் வளர்ச்சியை தூண்டுகிறது. உடல் சுறுசுறுப்பிற்கு காரணமான சராட்டினின் உற்பத்திக்கு உதவுகிறது. சிறுதானியங்களில் மெக்னீசியம் அதிக அளவில் காணப்படுகிறது. இது தீவிர ஆஸ்துமா குறைபாட்டையும், ஒற்றை தலைவலியையும் தடுக்கிறது. ரத்த அழுத்தத்தை சீராக்குவதால் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. விட்டமின் பி3 எனப்படும் நயாசின் அதிக அளவு கொழுப்பு சேருவதை குறைக்கிறது. 

அன்றாடம் சிறுதானியங்களை பயன்படுத்துவோருக்கு இரண்டாம் வகை இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோய் வருவது இல்லை. சிறுதானியங்களின் அதிக அளவில் உணவு பயன்பாட்டில் சேர்க்கும் பொழுது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. உடல் எடை ஊட்டச்சத்து குறைவினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் வராமல் இருப்பதற்கு உதவுகிறது. சிறுதானிய பயன்பாட்டினால் பெண்களுக்கு பித்தப்பையில் கற்கள் வருவது தடுக்கப்படுகிறது. அதிக அளவு நார்ச்சத்து மிகுந்த சிறு தானியங்கள் புற்றுநோய் வருவதை தடுக்கிறது. 

உடல் பருமம் கொண்டவர்கள் சிறு தானியங்களை பயன்படுத்தும் பொழுது உடல் எடையை சீராக குறைகிறது. பைட்டோ கெமிக்கல்ஸ் மற்றும் பைடிக் அமிலம் ஆகியன சிறுதானியங்களில் அதிக அளவு காணப்படுவதால் நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. அது போலவே பைடேட் புற்றுநோய் ஏற்படாமல் காக்க உதவுகிறது. எலும்பு வளர்ச்சிக்கும் நம் இயல்பான ஆரோக்கிய வளர்ச்சிக்கும் சிறு தானியங்கள் பெரும் துணை புரிகின்றன. ஜீரண சக்தி சிறுதானியங்களில் அதிக அளவு பயன்பாட்டில் உள்ள ராகி என்று அழைக்கப்படும் கேழ்வரகில் மாவுச்சத்து, புரதச்சத்து மற்றும் தாது பொருட்களான சுண்ணாம்பு, இரும்பு சத்துக்கள் மற்ற தானிய வகையை காட்டிலும் அதிக அளவு உள்ளன. கேழ்வரகு முளைகட்டும் தன்மை இருப்பதால் சத்து மாவு தயாரிப்பதற்கு பெரிதளவில் பயன்படுத்தப்படுகின்றது. 

தென்னிந்தியாவில் முளைகட்டிய கேழ்வரகு பானம் மிக புகழ் பெற்றது. கேழ்வரகில் உள்ள மாவுச்சத்து மெதுவாக சர்க்கரையாக மாறும் தன்மை உள்ளதால் கேழ்வரகினை உண்பதால் நீரிழிவு நோய் வராமல் இருக்கவும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டினுள் வைக்கவும் உதவுகிறது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது ஜீரண சக்தியை அதிகரிக்கவும், ரத்தத்தில் உள்ள தேவையில்லாத சர்க்கரை மற்றும் கொழுப்பு பொருட்களை வெளியேற்றவும் உதவுகிறது. கேழ்வரகில் அதிக அளவு சுண்ணாம்பு சத்து உள்ளது. 

இதை வளரும் குழந்தைகளுக்கு எலும்பு வளர்ச்சிக்கும் வயதானவர்களுக்கு எலும்பு தேய்மானத்தினால் ஏற்படும் வலி மற்றும் ஆர்தரைட்டிஸ், ஆஸ்டியோ போரோசிஸ் போன்ற நோய்களில் தன்மையை குறைக்கவும் உதவுகிறது. மேலும் அனிமியா அல்லது ரத்தசோகை நோய் வராமல் தடுக்க கேழ்வரகில் உள்ள இரும்புச்சத்து மிகவும் உபயோகமாக உள்ளது. (அடுத்த வாரம்:- சிறுதானியங்கள் ஒவ்வொன்றிலும் எவ்வளவு சத்துக்கள் உள்ளன. அதன் விவரங்களை பார்க்கலாம்). தகவல்:- வேளாண் அறிவியல் நிலையம், சந்தியூர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق