4 மற்றும் 5ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி (FIRST TERM ENNUM EZHUTHUM TRAINING) அளித்தல் , பணி விடுவித்தல் சார்பு SPD & DEE PROCEEDINGS - துளிர்கல்வி

Latest

Search This Site

الأربعاء، 10 مايو 2023

4 மற்றும் 5ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி (FIRST TERM ENNUM EZHUTHUM TRAINING) அளித்தல் , பணி விடுவித்தல் சார்பு SPD & DEE PROCEEDINGS


மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் இணைச் செயல்முறைகள், சென்னை - 600006. ந.க.எண்: 2411/எஃப்2/2021 நாள்.10.05.2023 

பொருள் : 

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - 2023 – 2024 ஆம் கல்வியாண்டில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கு எண்ணும் எழுத்தும் சார்ந்து முதல் பருவத்திற்கான ஒன்றிய அளவிலான ஆசிரியர்களுக்கான பயிற்சி - 4 மற்றும் 5ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களையும் பணி விடுவிப்பு செய்தல் - தொடர்பாக. 


பார்வை: 2022023 2024 ஆம் கல்வியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை சார்ந்த அறிவிப்பு நாள்.31.03.2023. 

பார்வையில் காணும் அறிவிப்பின்படி, 2023 - 2024 ஆம் கல்வியாண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், 2023- 2024ஆம் கல்வியாண்டு 4 மற்றும் 5ஆம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் சார்ந்து தமிழ், ஆங்கிலம், கணிதம் அறிவில் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான முதல் பருவத்திற்கான பாடப்பொருள் உருவாக்கப்பணி மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து 4 மற்றும் 5ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பயிற்சி 18.05.2023 முதல் 20.05.2023வரை மற்றும் மாவட்ட அளவிலான பயிற்சி 25.05.2023 முதல் 27.05.2023 வரை நடைபெறவுள்ளது. 
இதன் தொடர்ச்சியாக. 4 மற்றும் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒன்றிய அளவிலான பயிற்சி 01.06.2023 முதல் 03.06.2023 வரை 3 நாள்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்திட அறிவுறுத்தப்படுகிறது. 

இப்பயிற்சியில் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்ளும் வகையில் அவர்கள் பணிபுரியும் பள்ளிகளில் இருந்து பணிவிடுவிப்பு செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 

ليست هناك تعليقات:

إرسال تعليق