அரசு ஊழியர், ஆசிரியர், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு - துளிர்கல்வி

Latest

Search This Site

الجمعة، 19 مايو 2023

அரசு ஊழியர், ஆசிரியர், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் பிறப்பித்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:- 

 ஏப்ரல் மாதத்துக்கான அகவிலைப்படி தொகை, இப்போதுள்ள நடைமுறையில் உள்ள பணமில்லாத பரிவர்த்தனை முறையான மின்னணு தீர்வு சேவை மூலம் அளிக்கப்பட வேண்டும். 

அகவிலைப்படி உயர்வுக்கான பட்டியல்கள், கருவூல அலுவலர்கள் அல்லது சம்பளக் கணக்கு அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் முதன்மை மாநிலக் கணக்குத் துறைத் தலைவரின் அனுமதிக்காக காத்திருக்காமல் திருத்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும். ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட வேண்டிய அகவிலைப்படியை ஓய்வூதியம் அளிக்கும் அலுவலர்கள் கணக்கிட வேண்டும். அரசு ஓய்வூதியதாரர்கள், அரசு உதவி பெறும் மற்றும் உள்ளாட்சி மன்ற கல்வி நிறுவனங்களின் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி மன்றங்களின் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

ليست هناك تعليقات:

إرسال تعليق