ரூ.5 லட்சம், பாராட்டு சான்றிதழ்: சமூக சேவகர்களுக்கான கவர்னர் விருது! ஜூலை 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்! - துளிர்கல்வி

Latest

Search This Site

الثلاثاء، 6 يونيو 2023

ரூ.5 லட்சம், பாராட்டு சான்றிதழ்: சமூக சேவகர்களுக்கான கவர்னர் விருது! ஜூலை 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

ரூ.5 லட்சம், பாராட்டு சான்றிதழ்: சமூக சேவகர்களுக்கான கவர்னர் விருது விண்ணப்பிக்க ஜூலை 31-ந் தேதி கடைசி நாள் 

தமிழக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு 2023-ம் ஆண்டுக்கான கவர்னர் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு அடுத்த மாதம் (ஜூலை) 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விருதுக்கு ஒரு நிறுவனம் மற்றும் 3 தனி நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனத்துக்கு ரூ.5 லட்சமும், தனி நபர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்கப்படும். 

இதுதவிர பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும். விண்ணப்பங்கள் தேர்வு குழு மூலம் பரிசீலிக்கப்பட்டு விருதுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பங்களை கவர்னரின் துணை செயலாளர் மற்றும் கட்டுப்பாட்டாளர், கவர்னர் அலுவலகம், ராஜ் பவன், சென்னை - 600022 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். www.tnrajbhavan.gov.in என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து awardsrajbhavantamilnadu@gmail.com என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق