பல்கலைக்கழக பாடத்திட்ட குழுக்களின் ஒப்புதலோடு
298 இளநிலை, முதுநிலை பாடத்திட்டங்கள் நடைமுறைக்கு வந்தன
தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டங்களை வகுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாதிரி பாடத்திட்டம் வழங்கப்பட்டு, பின்னர் பல்கலைக்கழக பாடத்திட்ட குழுவின் ஒப்புதலோடு சில பாடத்திட்டங்கள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு இருக்கின்றன.
இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் உறுப்பினர்-செயலர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாணவர்களின் கல்வி, ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு, தொழில் முனைவுத் திறனை மேம்படுத்தும் வகையிலும், பாடங்களுக்கு இடையேயான இணைத்தன்மை இருக்கும் வகையிலும் பாடத்திட்ட தயாரிப்பு குழுவினரால் பாடத்திட்டம் வழங்கப்பட்டது.
அவ்வாறு வழங்கப்பட்டதில் 163 இளநிலை பாடத்திட்டங்கள், 135 முதுநிலை பாடத்திட்டங்கள் என மொத்தம் 298 பாடத்திட்டங்கள் பல்கலைக்கழக பாடத்திட்டக் குழுக்களின் ஒப்புதலுடன் 2023-24-ம் கல்வியாண்டு முதல் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தில் 25 சதவீதம் மாற்றங்கள் செய்து கொள்ள பல்கலைக்கழகங்களுக்கும், தன்னாட்சி கல்லூரிகளுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்துக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment