3 ஆண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் அடுத்த மாதம் 10-ந்தேதி கடைசி நாள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, July 15, 2023

3 ஆண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் அடுத்த மாதம் 10-ந்தேதி கடைசி நாள்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீர்மிகு சட்டப்பள்ளி ஆகியவற்றில் 3 ஆண்டு எல்.எல்.பி. சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, சீர்மிகு சட்டப்பள்ளியில் 3 ஆண்டு எல்.எல்.பி. (ஹானர்ஸ்) படிப்புக்கும், இணைவு பெற்ற சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு எல்.எல்.பி. படிப்புக்கும் வருகிற 17-ந்தேதி (நாளை மறுதினம்) முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் ரஞ்சித் ஓம்மன் ஆபிரகாம் தெரிவித்துள்ளார். www.tndalu.ac.in என்ற இணையதளம் மூலமாக விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment