பார்வை 1-ல் காணும் அரசாணையின் மூலம் பள்ளிக் கல்வித் துறையில் ஏற்கனவே அரசு
மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட 2689 கணினி பயிற்றுநர்கள் பணியிடங்களில்
காலியாக உள்ள 814 பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் கணினி பயிற்றுநர் நிலை-1
பணியிடங்களாக நியமிக்கப்பட அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
மேலும், கணினி பயிற்றுநராக
பணிபுரிபவர்களை கணினி பயிற்றுநர் நிலை-1 ஆக பணியிடங்கள் தரம் உயர்த்திட பார்வை 3ல்
காணும் பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி தகுதி வாய்ந்த கணினி பயிற்றுநர்
நிலை-2 இல் பணிபுரியும் ஆசிரியர்கள் சார்பாக பட்டியல்கோரி பெறப்பட்டு பார்வை (6) இல் காண்
செயல்முறைகள் வாயிலாக கணினி பயிற்றுநர் நிலை-1ஆக நிலை உயர்த்தி
ஆணையிடப்பட்டது.
பார்வை 4-ல் காண் அரசாணையில் கணினி பயிற்றுநர் நிலை-1ல் உள்ளவர்கள் 8
ஆண்டுகள் பணி முடித்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்வளித்து அரசால்
ஆணையிடப்பட்டது.
தற்போது பல மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் இருந்து கணினி பயிற்றுநர்
கணினி பயிற்றுநர் நிலை-1ஆக நிலை உயர்த்துவது சார்பாக
நிலை-!l பணியிடங்கள்
கருத்துருக்கள் பெறப்பட்டு வருகின்றது.
No comments:
Post a Comment