ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை வங்கி கணக்கில் பெற யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, August 10, 2023

ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை வங்கி கணக்கில் பெற யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை வங்கி கணக்கில் பெற யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் 
ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை வங்கி கணக்கில் பெற யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. ஊக்கத்தொகை தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் நான் முதல்வன் (போட்டி தேர்வுகள் பிரிவு) சிறப்பு திட்ட இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- தமிழ்நாடு அரசின் 2023-2024-க்கான பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப்பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளை செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்த திட்டத்தின்படி யு.பி.எஸ்.சி. குடிமைப்பணிகள் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தின் தொடக்கமாக, கடந்த 7-ந் தேதி நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2023-ம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தலா ரூ.25 ஆயிரத்துக்கான காசோலைகள் வழங்கி யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. வங்கி கணக்கில் ரூ.25 ஆயிரம் இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டி தேர்வுகள் பிரிவின் வாயிலாக 2023-ம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் முதன்மைத் தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை நேரடியாக மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ஊக்கத்தொகையை பெறுவதற்கு யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிக்கையை படித்துப்பார்த்து, 11-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment