ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் (ADW) காலியாக உள்ள 120 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்ப அனுமதி! - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, August 28, 2023

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் (ADW) காலியாக உள்ள 120 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்ப அனுமதி!

மின்னஞ்சல்: ஆதிதிராவிடர் நல இயக்குநர் அவர்களின் செயல்முறைகள், சென்னை-5. முன்னிலை : திரு.த.ஆனந்த், இஆப, ந.க.எண்.ஒ2/13735/2023 

பொருள்: 

ஆசிரியர் பணியமைப்பு கல்வி பள்ளிகள்- நலத்துறையின் கீழ் இயங்கும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலி4யாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் நிரப்பிட அனுமதி அளித்து ஆணையிடல் தொடர்பாக.

பார்வை: 

 1. அரசாணை (ப) எண்:198, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்(ஆதிந-7)துறை, நாள்:14.08.2023, 

2 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு கடிதம் (நிலை) எண்.36/ஆதிந7/2022,நாள்: 10.03.2023 

ஆணை:

பார்வை ஒன்றில் காணும் அரசாணையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலை / உயர்நிலை / நடுநிலை தொடக்கப்பள்ளிகளில் கல்வி பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் / பதவி உயர்வு மூலம் நிரப்பிடும் வரை அல்லது இக்கல்வியாண்டில் எது முன்னரோ அது வரையில் மாணாக்கர்களின் கற்றல் கற்பித்தல் மற்றும் பொதுத்தேர்வு எழுதும் வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி அவர்களை பொதுத்தேர்வு எழுதுவதற்கு தயார் செய்வதற்கு ஏதுவாகவும், ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற பணிநாடுநர்களை, பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தெரிவு செய்து தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016 பிரிவு 19-இன்படி முற்றிலும் தற்காலிகமாக நிரப்பிட அரசு அனுமதி அளித்து ஆணையிடப்பட்டுள்ளது. பார்வையில் காணும் அரசாணையினை பின்பற்றி, ஆதிதிராவிடர் நல நடுநிலை. உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 120 பட்டதாரி ஆசிரியர்கள். (இணைப்பில் தெரிவித்துள்ள காலிப்பணியிடங்களுக்கு மட்டும்) பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிகமாக ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15,000/- மாதத்தொகுப்பூதியத்தில் கீழ்கண்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நிரப்பிட சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு அனுமதி அளித்து ஆணையிடப்படுகிறது. 

பணி நியமனத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள். 

1. ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, அப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் / பதவி உயர்வு மூலம் நிரப்பிடும் வரை அல்லது இக்கல்வியாண்டில் பள்ளி இறுதி தேர்விற்கு முந்தைய மாதம் வரை இவற்றில் எது முன்னரோ அது வரையில் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற பணிநாடுநர்களை, பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தெரிவு செய்து தற்காலிகமாக நிரப்பி கொள்ள வேண்டும். 

2.காலிப்பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பிடும்போது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவருக்கு முன்னுரிமை அளித்து நிரப்பப்பட வேண்டும். 

3. தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, பணிக்கு தெரிவு நியமனம் செய்யப்படும் நாள் முதல் ஏப்ரல் 2024 முடிய உள்ள மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக பள்ளி மேலாண்மை குழுவின் வாயிலாக அந்தந்த ஊர்களில் பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அருகில் உள்ள பகுதியில் உள்ள தகுதியுள்ள நபர்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் மூத்த முதுகலை பட்டதாரி/ பட்டதாரி ஆசிரியர் ஆகியோரை உறுப்பினராக கொண்ட குழு மூலமாக தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. அவ்வாறு தேர்வு செய்யும்போது இது முற்றிலும் தற்காலிகமானது என்பதை நியமனம் செய்யப்படும் நபர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். 

4. ஆதிதிராவிடர் நல நடுநிலை. உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை மட்டுமே தற்காலிகமாக அந்தந்த ஆசிரியர் பணிக்கான தகுதி பெற்ற நபர்களை பள்ளி மேலாண்மை குழுவின் வாயிலாக நிரப்பிக்கொள்ள வேண்டும். 
5. தொடர்புடைய பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை சம்பந்தப்பட்ட பாடத்திற்கான முழுமையான கல்வித்தகுதி பெற்ற நபர்களை மட்டுமே மேலே தெரிவிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் கொண்ட குழுவின் மூலம் எவ்வித புகார்களுக்கும் இடமின்றி பள்ளி மேலாண்மைக் குழுவின் வாயிலாக நிரப்பிக் கொள்ள வேண்டும். 

6. ஆசிரியர்தேர்வு வாரியம் மூலம் பணிநாடுநர்களை தேர்வு செய்து நிரப்பப்படும் வரை / பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் வரை தற்காலிக அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப ஏற்பாடு செய்யப்படவுள்ளதால், அக்காலக்கட்டத்திற்குள் தொடர்புடைய பாடப்பகுதிகள் (Subject Portions) அனைத்தும் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நியமனம் செய்யப்படும் ஆசிரியரால் நடத்தி முடிக்கப்படவேண்டும் என்பதோடு இதனை சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் தொடர்ந்து கண்காணித்தல் வேண்டும். மேலும், இந்நடவடிக்கைகள் பள்ளி பார்வையின் போது தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர்களால் உறுதி செய்யப்பட வேண்டும். 

7. பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களில் பணிபுரியும் நபர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கான ஒப்புகைச்சீட்டு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியரால் பராமரிக்கப்பட வேண்டும். இது தணிக்கைக்கு உட்பட்டது ஆகையால் ஒப்புகைச்சீட்டு பள்ளித் தலைமை ஆசிரியரின் முழுக்கட்டுப்பாட்டில் இருத்தல் வேண்டும். 

8. அவ்வாறு பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்படும் ஆசிரியர்கள் பணிபுரியும் பணியிடத்திற்கு மேற்கண்ட காலத்திற்குள் (மாதத்திற்குள்) பதவி உயர்வு மூலமாகவோ அல்லது நேரடி நியமனம் மூலமாகவே அல்லது மாறுதல் மூலமாகவோ நிரப்பப்படின் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்பப்படும் ஆசிரியர்களை உடனடியாக பணிவிடுவிப்பு செய்யப்பட வேண்டும். 

9. மேலும், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்பப்படும் பணியிடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த பணிநாடுநர் பட்டதாரி ஆசிரியர் நிலையில் இருப்பின் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி பெற்றவர்களுக்கும், அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தகுதியான தன்னார்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். 

10. இந்நியமனமானது முற்றிலும் தற்காலிகமானது எனவும், மாறுதல் / முறையான நியமனங்களின் மூலம காலிப்பணியிடம் பூர்த்தி செய்யப்படும் அன்றே தற்காலிக ஏற்பாட்டின் பேரில் பணியமர்த்தப்பட்டவர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார். மேலும் அன்னாரது பணி மற்றும் நடத்தை திருப்தி இல்லையெனில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி உடனடியாக பணியிலிருந்து விடுவிக்கப்படுவர்.

No comments:

Post a Comment