என்ஜினீயரிங் கல்லூரிகளில் தமிழாசிரியர்களை நியமிக்க உத்தரவு
என்ஜினீயரிங் இளங்கலை படிப்புகளில் முதல் செமஸ்டரில் தமிழர் மரபு மற்றும் 2-வது செமஸ்டரில் தமிழரும், தொழில் நுட்பமும் ஆகிய பாடங்கள் அண்ணா பல்கலைக்கழக பாடத் திட்டத்தின்படி நடத்தப்பட்டு வருகின்றன. இது என்ஜினீயரிங் மாணவர்கள் தமிழ்மொழியின் அடிப்படையை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டது.அந்த தமிழ் பாடங்களுக்கான தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 21-ந் தேதி நடைபெற்றது. மே மாதம் 25-ந் தேதி அந்த விடைத்தாள்களை தமிழ் ஆசிரியர்களை வைத்து திருத்தாமல் பிறபாடங்களை நடத்தும் ஆசிரியர்களை வைத்து திருத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே என்ஜினீயரிங் படிப்பில் தமிழ் பாடங்களை நடத்த தகுதியான தமிழ் ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். அந்த ஆசிரியர்கள் எம்.ஏ., எம்.பில், ஆகியவற்றுடன் தேசிய தகுதித்தேர்வு, மாநில அளவில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டு உள்ளது.
No comments:
Post a Comment