தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இன்று வெளியிட்டுள்ள 17-08-2023 முக்கிய செய்தி! - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, August 17, 2023

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இன்று வெளியிட்டுள்ள 17-08-2023 முக்கிய செய்தி!

செய்தி வெளியீட்டு எண் : 64 /2023 நாள்: 17.08.2023 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எண்.3, தேர்வாணையச் சாலை, சென்னை 600 003. செய்தி வெளியீடு 

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -IV (தொகுதி - IV}இல் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர் / இளநிலை உதவியாளர் / கள உதவியாளர் / வரித் தண்டலர் / பண்டகக் காப்பாளர் போன்ற பதவிகளுக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வானது, கடந்த 20.07.2023 முதல் 10.08.2023 வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற்றது. மேற்கூறிய கலந்தாய்வில் 5364 இளநிலை உதவியாளர் / வரித் தண்டலர் / கள உதவியாளர் பணியிடங்களும் மற்றும் 425 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. மேலும், மீதமுள்ள 47 காலிப்பணியிடங்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் தகுதி வாய்ந்த தேர்வர்களைக் கொண்டு நிரப்பப்படும். மேலும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் - தேர்வு IV (தொகுதி - IV)இல் அடங்கிய 3373 தட்டச்சர் பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 21.08,2023 முதல் 11.09.2023 வரை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து 1079 சுருக்கெழுத்துத் தட்டச்சர் பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 20.09.2023 முதல் 26.09.2023 வரை நடைபெறும். தேர்வாணைய அலுவலகத்தில் போதிய இடவசதி இன்மையால் மேற்கண்ட நாட்களில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வருகை புரியும் விண்ணப்பதாரர்கள் தங்களுடன் இளம் சிறார்கள், பெண்கள் மற்றும் :முதியோர் ஆகியோர்களை உடன் அழைத்து வருவதினை தவிர்த்து தேர்வாணைய அலுவலகத்தின் எதிரே ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க தேர்வாணையத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

பிஓ மா மகேஸ்வரி, இஆ.ப., செயலாளர்


No comments:

Post a Comment