பழங்குடியினர் நலப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் கடைசி தேதி 05-09-2023 - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, September 1, 2023

பழங்குடியினர் நலப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் கடைசி தேதி 05-09-2023

பழங்குடியினர் நலப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் கடைசி தேதி 05-09-2023 

வேலூர் மாவட் டத்தில் உள்ள பழங்குடியினர் நலத் துறை பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இது குறித்து, மாவட்ட ஆட்சி யர் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூர் மாவட்டத்தில் பழங்கு டியினர் நலத் துறையின்கீழ், செயல் படும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் பதவி உயர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணிநாடுநர் தேர்வு செய்து நிரப்பப்படும் வரை முற்றிலும் தற் காலிக அடிப்படையில் நிரப்பிட அரசாணை பிறப்பித்துள்ளது. 

அதன்படி, வேலூர் மாவட்டத் தில் அல்லேரி, தொங்குமலை, குடி கம் ஆகிய மூன்று தொடக்கப்பள் ளிகளில் தலா ஒரு பணியிடம் காலி யாக இருப்பதாக அறிவிக்கப்பட் டுள்ளது. இந்த காலிப் பணியிடங் களுக்கு மறுகட்டமைப்பு செய்யப் பட்டுள்ள பள்ளி மேலாண்மைக் குழுமூலம்பணிநாடுநர்களை தேர்வு செய்து தொகுப்பூதியத்தில் நியமிக்க வும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்பும்போது பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கவும், அவர்கள் இல்லாதபட்சத்தில் ஆதிதிராவிடர் இனத்தவருக்கு முன்னுரிமை அளிக் கவும் வேண்டும். 

ஒன்றுக்கு மேற் பட்ட தகுதிவாய்ந்த பணிநாடுநர் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நிலையில் இருந்தால் ஆசிரியர் தகு தித்தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக் கும், அவ்வாறு இல்லையேல் இல் லம் தேடிக் கல்வி திட்டத்தில் பணி புரியும் தன்னார்வலர்களுக்கும் நேரடியாக முன்னுரிமை வழங்க வேண்டும். 

விண்ணப்பங்களை அல்லது அஞ்சல் மூலமாக உரிய கல்விச் சான்றுகளுடன் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் செப்டம்பர் 5-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சேர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment