தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 14-09-2023 வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, September 14, 2023

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 14-09-2023 வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எண்.3, தேர்வாணையச் சாலை, சென்னை-600 003 செய்தி வெளியீடு நாள்: 14.09.2023 14

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) பணிகளில் அடங்கிய சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை-III) பதவிக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 30.03.2022 நாளிட்ட அறிவிக்கை எண்.07/2022-இன் வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிக்கான எழுத்துத்தேர்வு கடந்த 24.07.2022 முய அன்று நடைபெற்ற, எழுத்துத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் 24.03.2023 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. 
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு.IV (தொகுதி-IV) பணிகளில் அடங்கிய சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை.III) பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 21,09.2023 முதல் 26.09.2023 வரை (ஞாயிறு நீங்கலாக) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், எண்.3, தேர்வாணையச் சாலை (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்), சென்னை-600003-ல் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 

மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் ஒட்டுமொத்த தரவரிசை எண் / இடஒதுக்கீட்டு விதி மற்றும் இப்பதவிக்கான காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வாணைய சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக்கடிதத்தினை விண்ணப்பதாரர்கள் இணையதளமான www.tnpsc.gov.in-லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான விவரம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (c-mail) மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண்கள் / ஒட்டுமொத்த தரவரிசை / இடஒதுக்கீட்டு விதிகள் / விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். எனவே, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் வரத்தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. பி.உமா மகேஸ்வரி, இஆப, செயலாளர்

No comments:

Post a Comment