தமிழ்நாட்டை சேர்ந்த கோவை பேராசிரியர் பிருந்தாவுக்கு தேசிய நல்லாசிரியர் விருது மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, September 2, 2023

தமிழ்நாட்டை சேர்ந்த கோவை பேராசிரியர் பிருந்தாவுக்கு தேசிய நல்லாசிரியர் விருது மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு

தமிழ்நாட்டை சேர்ந்த கோவை பேராசிரியர் பிருந்தாவுக்கு தேசிய நல்லாசிரியர் விருது மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு 

செப்டம்பர் மாதம் 5-ந்தேதி மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் மத்திய-மாநில அரசுகள் சார்பில் சிறப்பாக பணியாற்றும் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்கி வருகிறது. இந்தநிலையில் கல்லூரி அளவில் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் 13 பேர் அடங்கிய பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது. 

இதில் தமிழ்நாட்டைச்சேர்ந்த கல்லூரி பேராசிரியர் எஸ்.பிருந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கோவை பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் துறைத்தலைவராக பணிபுரிந்து வருகிறார். நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பவர்களுக்கு வருகிற 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் விஞ்ஞான் பவனில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவிப்பார்.


No comments:

Post a Comment