தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் குரூப்-4 பதவிகளில் வரும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு, அதில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 673 பேரை பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்து அறிவித்தனர்.
அவ்வாறு ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி அதன் மூலம் பணி நியமனம் வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி, வருகிற 25 (திங்கட்கிழமை) மற்றும் 26 (செவ்வாய்க்கிழமை)-ந் தேதிகளில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரி மாணவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
25-ந் தேதி தேர்வாணைய பட்டியலின் வரிசை எண் 1 முதல் 175 வரை காலை 8 மணிக்கும், 176 முதல் 351 வரை (323 தவிர்த்து) பிற்பகல் 12 மணிக்கும், அதேபோல் 26-ந் தேதி 352 முதல் 526 வரை (439 தவிர்த்து) காலை 8 மணிக்கும், 527 முதல் மீதமுள்ள நபர்களுக்கு பிற்பகல் 12 மணிக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
பணிக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளவர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
கலந்தாய்வு முடிந்து, 27-ந் தேதி (புதன்கிழமை) பணி நியமன ஆணை வழங்கப்படும். அதுவரை பணிக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்கள் சொந்த செலவில் தங்குவது உள்பட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும்.
No comments:
Post a Comment