மேல்நிலை பொதுத் தேர்வு -2024க்கு புதிய தேர்வு மையங்கள் அமைக்க கருத்துருக்கள் அனுப்புதல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அறிவுரைகள்! - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, September 21, 2023

மேல்நிலை பொதுத் தேர்வு -2024க்கு புதிய தேர்வு மையங்கள் அமைக்க கருத்துருக்கள் அனுப்புதல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அறிவுரைகள்!

மேல்நிலை பொதுத் தேர்வு -2024க்கு புதிய தேர்வு மையங்கள் அமைக்க கருத்துருக்கள் அனுப்புதல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அறிவுரைகள்! 

2023-2024ம் கல்வி ஆண்டு மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத் தேர்வுக்குரிய புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் தொடர்பான கருத்துருக்களை கீழ்க்குறிப்பிட்ட அறிவுரைகளைப் பின்பற்றி அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தங்கள் மாவட்டத்திலுள்ள பள்ளிகளிலிருந்து நடப்பு கல்வியாண்டு 2023-2024 மேல்நிலை பொதுத் தேர்வுகளுக்கான புதிய தேர்வு மையங்கள் கோரும் கருத்துருக்களை அனுப்பி வைக்கக் கோரி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அதன்பின் பள்ளிகளிலிருந்து பெறப்படும் கருத்துருவினைப் பரிசீலினை செய்து, அப்பள்ளிகளை நேரில் பார்வையிட்டு பிற்சேர்க்கை ‘அ’ மற்றும் ‘ஆ’ ஆகியவற்றை பூர்த்தி செய்து கருத்துருவினை அனுப்புதல் வேண்டும். 

புதிய தேர்வு மையங்கள் கோரி கருத்துரு அனுப்பப்படும்பொழுது, திட்டவட்டமான தங்களது குறிப்புரையுடன் கருத்துரு அனுப்புதல் வேண்டும். அவ்வாறு பரிந்துரை செய்து கருத்துரு அனுப்பப்பட்ட புதிய தேர்வு மையங்கள் பற்றிய செய்தியினை மந்தணமாக வைத்துக் கொள்ளுதல் வேண்டும். மேலும், 2023 மேல்நிலைத் தேர்விற்காக ஓராண்டிற்கு மட்டும் தேர்வு மையம் அமைக்க அனுமதிக்கப்பட்ட பள்ளிகள் தொடர்ந்து தேர்வுமையமாக செயல்பட வேண்டும் எனில் (சென்ற ஆண்டு வழங்கப்பட்ட ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனை / நிபந்தனைகளை பூர்த்தி செய்யப்பட்டிருப்பின்) மீண்டும் கருத்துரு அனுப்பி, இயக்குநரின் ஆணை பெறவேண்டும் எனத் தெரிவிக்கலாகிறது. எக்காரணங் கொண்டும் கருத்துருவினை பழைய படிவங்களில் பூர்த்தி செய்து அனுப்புதல் கூடாது.

No comments:

Post a Comment