கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் (D.Co-op) சேர்வதற்கான இணையவழி விண்ணப்பங்கள் தொடக்கம் (PDF) - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, September 13, 2023

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் (D.Co-op) சேர்வதற்கான இணையவழி விண்ணப்பங்கள் தொடக்கம் (PDF)



+2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும். 01.08.2023 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. 
இப்பயிற்சிக்கு அதிகாரபூர்வ இணையதளமான www.tncuicm.com மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சிக்கு 13.09.2023 அன்று முதல் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். 
இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அதற்கான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படம் பதிவேற்றம் (Upload) செய்ய வேண்டும். 
விண்ணப்ப கட்டணம் ரூ.100/-ஐ அரசுடமையாக்கப்பட்ட / கூட்டுறவு வங்கிகள் மூலம் TNSC Bank, Chetput branch, Chennai -10 SB A/c No. 210008171, IFSC Code: TNSC0000001 என்ற கணக்கில் செலுத்திவிட்டு அதற்கான Challan-ஐ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். 
விண்ணப்பத்தில் உள்ள QR Code மூலம் Scan செய்தும் செலுத்தலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட மேலாண்மை நிலையங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில் தனி தனியே ரூ. .100/- விண்ணப்ப கட்டணம் வங்கியில் செலுத்திவிட்டு அதற்கான Challan-ஐ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தில் உள்ள QR Code மூலம் Scan செய்தும் செலுத்தலாம். பதிவேற்றம் செய்த Challan நகல் மற்றும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து (Application Printout copy) அதில் சுயஒப்பமிட்டு (Self Attested) சம்மந்தப்பட்ட கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நேரில் சமர்ப்பித்து தல் பெற்றுக்கொள்ளவேண்டும். அல்லது பதிவு அஞ்சலில் ஒப்புகையுடன் (Register Post withAcknowledgement) அல்லது Courier மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். > இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 22.09.2023 அன்று பிற்பகல் 5 மணி வரை மட்டும். 
அதற்குப்பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. பயிற்சிக்கான கூடுதல் விவரங்கள், வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் இணையத்தள முகவரி www.tncuicm.comமூலம் தெரிந்துக்கொள்ளலாம். இணையவழி மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இணையவழியாக அல்லாமல் நேரடியாகவோ அல்லது தபால்மூலமோ மட்டும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களுக்கு விண்ணப்பித்திருந்தால், அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம்கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 

No comments:

Post a Comment