தமிழகம் முழுவதும் அரசு பணிக்காக கா்திருப்போர் எண்ணிக்கை! - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, September 13, 2023

தமிழகம் முழுவதும் அரசு பணிக்காக கா்திருப்போர் எண்ணிக்கை!

தமிழகம் முழுவதும் அரசு பணிக்காக 65 லட்சத்து 71 ஆயிரம் பேர் காத்திருப்பு 

தமிழகம் முழுவதும் 65 லட்சத்து 71 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பதிவும், சலுகையும்... தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரி படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் 2 மாதங்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது. 

 65.71 லட்சம் பேர் இந்த நிலையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் பற்றிய விவரம் வருமாறு:- பதிவு செய்து அரசு வேலைக்கு காத்திருக்கும் ஆண்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 55 ஆயிரத்து 153; பெண்களின் எண்ணிக்கை 35 லட்சத்து 15 ஆயிரத்து 856; மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 291 என மொத்தம் 65 லட்சத்து 71 ஆயிரத்து 300 பேராகும். 

 மாணவர்கள் அவர்களில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 16 லட்சத்து 80 ஆயிரத்து 160 பேர். 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 27 லட்சத்து 98 ஆயிரம் பேர். 31 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் 18 லட்சத்து 32 ஆயிரத்து 232 பேர். 46 முதல் 60 வயது வரையுள்ள பதிவுதாரர்கள் 2 லட்சத்து 54 ஆயிரத்து 128 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6,780 பேர் உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 1 லட்சத்து 47 ஆயிரத்து 612 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment