கல்வி உதவித் தொகை: மாணவர் விவரம் பதிவேற்ற அறிவுறுத்தல் - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, October 25, 2023

கல்வி உதவித் தொகை: மாணவர் விவரம் பதிவேற்ற அறிவுறுத்தல்

கல்வி உதவித் தொகை: மாணவர் விவரம் பதிவேற்ற அறிவுறுத்தல் 

கல்வி உதவித் தொகை பெறத் தகுதியான பள்ளி மாணவர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்ற சம்பந்தப் பட்ட தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிகல்வி இயக்குநர் அறிவொளி அனுப்பிய சுற்றறிக்கை: நிகழ் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு ப்ரீ மெட்ரிக் மற் றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை பெறுதல் சார்ந்த வழி காட்டுதல்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டன. 

அதைத் தொடர்ந்து மாணவர்களின் விவரங்களை எமிஸ் வலைத்தளத்தில் பதிவு செய் வது அவசியம். அந்தவகையில் கல்வி உதவித் தொகை பெற தகுதி யான மாணவர்கள் பள்ளியில் தங்களின் ஜாதி மற்றும் குடும்ப வரு மானச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். கல்வி உதவித் தொகையானது மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். 

அதனால் மாணவரின் வங்கிக்கணக் கில் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே, ஜாதி, வருமானச் சான்றிதழ் இதுவரை பெறாத மாணவர்கள் உடனே அருகே உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பித்து உரிய சான்றுகளை பெற்றுக் கொள்ள வேண்டும். அவற்றின் நகல்களையும் பள்ளிகளில் ஒப்படைக்க வேண்டும். இந்த தகவல்களை மாணவர்களுக்கு தெரிவித்து, உரிய சான்றிதழ் களை மாணவர்களிடம் பெற்று, அதன் விவரங்களை நவம்பர் 15– ஆம் தேதிக்குள் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண் டும். இதுசார்ந்து அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்க ளுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment