TRB மூலம் தெரிவு செய்யப்பட்டு அக்டோபர் 2022 ல் பணி நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, October 17, 2023

TRB மூலம் தெரிவு செய்யப்பட்டு அக்டோபர் 2022 ல் பணி நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

TRB மூலம் தெரிவு செய்யப்பட்டு அக்டோபர் 2022 ல் பணி நியமனம் பெற்ற கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாட முதுகலை ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!


2020-2021 முதல் 2022-2023 ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணிதம் பாட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பார்வை-1ல் காணும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனத்துக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பார்வை-2ல் காணும் இவ்வியக்கக செயல்முறைகள் மூலம் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. சார்ந்த கணிதம் பாட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்யப்பட்டுள்ள மேற்படி தேர்வு செய்யப்பட்டு ஆசிரியர்களுக்கு தனித்தனியாக பணிவரன் முறை செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கலாகிறது. சார்ந்த முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதிகாண் பருவம் முடித்து ஆணை வழங்கும் அலுவலர் முதன்மைக் கல்வி அலுவலர் என்பதால், அனைத்து கல்வித் தகுதிச் சான்றுகள் உண்மைத்தன்மை சரிப்பார்த்து பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே தகுதிகாண் பருவம் முடித்தலுக்கான ஆணை வழங்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment