நெய்வேலியில் இயங்கும் என்.எல்.சி. நிறுவனத்தில் தொழில் பழகுநர் (அப்ரண்டீஸ்) பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிட்டர் (120),
டர்னர் (45),
மெக்கானிக் (120),
எலெக்ட்ரீஷியன் (123),
வயர்மேன் (110),
மெக்கானிக் (டீசல்-20),
மெக்கானிக் (டிராக்டர்-10),
தச்சர் (10),
பிளம்பர் (10),
ஸ்டெனோ கிராபர் (20),
வெல்டர் (108) உள்பட பல்வேறு பிரிவுகளில் 736 பணி இடங் களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அதிபட்ச வயது 35. இதற்கு முன்பு இப்பயிற்சி பெற்றவர்கள் அல்லது தற்போது பயிற்சி பெறுபவர்கள் விண்ணப்பிக்க தகுதியில்லை. தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
www.nlcindia.in இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து ‘பொது மேலாளர், கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், என்.எல்.சி. நிறுவனம், நெய்வேலி - 607803’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தேர்வு முறை, விண்ணப்பிக்கும் நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை என்.எல்.சி. இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10-11-2023.
No comments:
Post a Comment