நன்னடத்தை அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி 15-12-2023 - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, November 27, 2023

நன்னடத்தை அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி 15-12-2023

நன்னடத்தை அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி 15-12-2023
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் மிஷன்வாட்சல்யா திட்டத்தின் அடிப்படையில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணியிடம் (1 காலி பணியிடம்) நிரப்புவதற்கு மாதம் ரூ.27,804/- தொகுப்புதியத்தில் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் B.L or L.L.B தேர்ச்சி பெற்று, பெண்கள் மற்றும் குழந்தை உரிமைகள் துறையில் அரசு / தன்னார்வ தொண்டு நிறுவனம் / சட்ட விஷயங்களில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவத்துடன், பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் பற்றிய நல்ல புரிதலுடன் கூடிய 42 வயதிற்குட்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் இதற்கான விண்ணப்பங்களை என்ற www.nagapattinam.tn.nic.in இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். புர்த்திசெய்த விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண்.209, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகப்பட்டினம் - 611003 என்ற முகவரிக்கு 15.12.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 04365 253018 என்ற எண்ணிற்கு தொடர்புக்கொள்ளலாம். 

No comments:

Post a Comment