பள்ளிக் கல்வி அரசு நிதி உதவிபெறும் பள்ளிகள் 2023-24 ஆம்
கல்வியாண்டிற்கான பணியாளர் நிர்ணயம்
தொடர்
நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் - அறிவுரைகள் வழங்குதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
2023-24 ஆம் கல்வியாண்டில் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளுக்கான பணியாளர்
நிர்ணயம் தொடர்புடைய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் நிர்ணயிக்கப்பட்டு
ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், உயரிப் பணியிடங்களில் பணிபுரிந்து வரும்
ஆசிரியர்கள் தொடர்ந்து அதே பணியிடங்களில் பணிபுரிய அனுமதிக்கப்படும் சூழலில் அரசுக்கு
ஏற்படும் நிதியிழப்பினை தவிர்த்திடும் பொருட்டும், அரசுத் தணிக்கையில் உபரி ஆசிரியர்களை
பணிநிரவல் செய்யாத காரணத்தினால் அரசுக்கு ஏற்படும் நிதியிழப்பினை சுட்டிக்காட்டி
பல்வேறு தணிக்கைத் தடைகள் எழுப்பப்பட்டுள்ளமை, மாண்பமை சென்னை உயர் நீதிமன்றம்
பல்வேறு வழக்குகளில் இப்பொருள் சார்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள
அறிவுறுத்தியுள்ளமை ஆகியவற்றை கருத்திற் கொண்டு 2023-24 ஆம் கல்வியாண்டில் அரசு
நிதி உதவிபெறும் பள்ளிகளில் அரசு மான்யத்தில் ஊதியம் பெற்று பணிபுரிந்து வரும் உபரி
ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது சார்ந்து பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.
No comments:
Post a Comment