டிசம்பர் 2ஆம் தேதி மாபெறும் வேலைவாய்ப்பு முகாம்! - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, November 27, 2023

டிசம்பர் 2ஆம் தேதி மாபெறும் வேலைவாய்ப்பு முகாம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வேலைதேடுபர்களை தனியார்துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு: மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் & இளைஞர் திறன் விழா 02.12.2023 சனிக்கிழமை அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறவுள்ளது. 


இம்முகாமில் கணினித்துறை, தொழில்துறை, சேவைத்துறை, ஆட்டோமொபைல் துறை, டெக்ஸ்டைல்ஸ் மற்றும் விற்பனைத்துறை போன்ற தமிழக அளவில் பல்வேறு முன்னணி தனியார்துறைகளைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்கவுள்ளனர். மேலும், அயல் நாட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவு மற்றும் இலவச திறன் பயிற்சிக்கான பதிவிற்கும் பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் டிரைவர் உள்ளிட்ட 8-ம் வகுப்பு, 102 வகுப்பு தேர்ச்சி/ தோல்வி, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ. டிப்ளமோ, அக்ரி. செவிலியர். ஆசிரியர் தகுதி, ஹோட்டல் மேனேஜ்மென்ட், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகள் போன்ற கல்வித்தகுதிகளையுடைய 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைதேடுபவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுய விவரக்குறிப்புகளுடன் (Bio-data), அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். 

மேலும் இம்முகாம் குறித்த விவரங்களுக்கு 8807204332/04151-295422 தொடர்புகொள்ளலாம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த வேலைதேடுபவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment