‘நெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க 30-ந்தேதி கடைசிநாள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, November 3, 2023

‘நெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க 30-ந்தேதி கடைசிநாள்

நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் உதவிப்பேராசிரியராக பணியாற்றவும், இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறவும், சி.எஸ்.ஐ.ஆர் ‘நெட்’ தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இதற்கான கணினி வழித்தேர்வு, தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ) சார்பில் ஆண்டுதோறும் நடத்துகிறது.நடப்பாண்டுக்கான சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு, வரும் டிசம்பர் 26, 27 மற்றும் 28-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள், https://csirnet.nta.ac.inஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என என்.டி.ஏ. தெரிவித்துள்ளது. விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள டிசம்பர் 2-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment