கண் நீர் அழுத்த நோய் - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, November 10, 2023

கண் நீர் அழுத்த நோய்

கண் நீர் அழுத்த நோய் 
 உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க ரத்த அழுத்தம் சரியாக இருக்க வேண்டியது அவசியம். அது போல் கண்ணுக்குள் சுரக்கும் நீர் அழுத்த அளவும் சரியாக இருந்தால்தான் கண்ணின் வடிவமைப்பு பாதுகாக்கப்படுவதுடன் கண் நரம்புகள் ஆரோக்கியமாக இருக்கும். கண்ணின் நீர்அழுத்தம் அதிகமானால், அது பார்வை நரம்பை கொஞ்சம் கொஞ்சமாகப் பாதித்து பார்வை இழப்பை ஏற்படுத்தும். பெரும்பாலும் முன்அறிகுறிகள் தென்படாமல் நம் பார்வை முழுவதையும் ரகசியமாக திருடிவிடும், கண்ணின் நீர்அழுத்த நோைய ‘கிளாகோமா’ என்று மருத்துவ உலகம் அழைக்கிறது. 

40 வயதுக்கு மேற்பட்டவர்கள், சிறு வயதிலிருந்தே கிட்டப்பார்வை, தூரப்பார்வைக்கு கண்ணாடி அணிந்திருப்பவர்கள், ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து உட்கொண்டு வருபவர்கள், மனநல மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருப்பவர்கள், நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு நோய், தைராய்டு உள்ளவர்கள், கண்களில் அடிபட்டவர்கள், கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மற்றும் பெற்றோருக்கு கிளாகோமா பாதிப்பு இருந்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் அருகில் உள்ள கண் டாக்டரை அணுகிக் கண் நீர்அழுத்தப் பரிசோதனையை செய்துகொள்வது நல்லது. இந்நோய், கொஞ்சம் கொஞ்சமாக பக்கவாட்டு பார்வையை இழக்க ைவத்து, கடைசியாக மையப் பார்வையும் இழக்கச்செய்யும். கண் நீர் அழுத்த நோைய தொடர்ச்சியாகச் சொட்டு மருந்துகளை இட்டு வருவதன் மூலம் கட்டுப்படுத்தலாம். 

 அவ்வாறு கட்டுப்படுத்த முடியாத நிலையில் அறுவை சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தலாம். கண் நீர் அழுத்த நோய் உள்ளவர்களுக்கு முறையான வாழ்க்கை முறை மாற்றங்கள் தேவை. பொதுவாக இந்நோயை அறிந்துகொண்டவர்கள் ஓரிரு மாதங்கள் மட்டும் மருந்தைப் பயன்படுத்தி விட்டு, வருடக்கணக்கில் அதைப் பற்றி கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். மீண்டும் டாக்டரை அணுகும்போது அவர்களுடைய பார்வை நரம்பு முழுவதும் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட பார்வையற்றவர்களாக மாறி இருப்பார்கள் எனவே டாக்டரின் அறிவுரைப்படி அவர் கூறும் கால அளவுக்கு சொட்டு மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், இந்நோயால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்கலாம்.

No comments:

Post a Comment