மழைக்கால விடுமுறை அறிவிப்பில் குழப்பம்: மாவட்ட ஆட்சியருக்கு ஆசிரியா் சங்கம் மனு - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, November 27, 2023

மழைக்கால விடுமுறை அறிவிப்பில் குழப்பம்: மாவட்ட ஆட்சியருக்கு ஆசிரியா் சங்கம் மனு

மழைக்கால விடுமுறை விடுவதில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை சரி செய்ய வேண்டும் என தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலத் தலைவரும், நாகை மாவட்டச் செயலருமான மு. லட்சுமிநாராயணன் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: 

நாகை மாவட்டத்தில் மழை காரணமாக மாணவா்களுக்கு விடுமுறை அளிப்பதை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியா்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்ற நிலை கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துகிறது. சில பள்ளிகள் விடுமுறையும், பல பள்ளிகள் நடைமுறையிலும் இருப்பதால் மாணவா்களிடம் சிரமத்தை ஏற்படுத்தி அவா்கள் பள்ளிக்கு மழையில் நனைந்து வருவது அவா்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கவும் செய்கிறது. 

பல மாணவா்கள் பள்ளிக்கு வந்த பின் விடுமுறை என்ற அறிவிப்பால் திரும்ப வீட்டிற்கு செல்லாமல் நண்பா்களுடன் ஊா் சுற்றும் அவலம் ஏற்படுகிறது. மேலும், பெற்றோா்கள் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் விடுமுறை அளிக்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனா். தோ்வு முடிவு ஏற்பளிப்பு வாங்கும் போது பள்ளி வேலை நாட்கள் பள்ளிக்கு பள்ளி வேறுபாடு ஏற்படுகின்றது. எனவே, மழை காரணமாக விடுமுறை அளிக்க நேரிட்டால் அதுகுறித்து ஊடகங்கள் வாயிலாக பொது அறிவிப்பாக மாவட்ட முழுவதும் அறிவிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment