பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க 31-ந்தேதி கடைசி நாள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, December 8, 2023

பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க 31-ந்தேதி கடைசி நாள்

இதர பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி கடைசி நாள் ஆகும். 
கல்வி உதவித்தொகை நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட உள்ளது. 2023-24-ம் ஆண்டிற்கு https://scholarships.gov.in/public/FAQ/topclassschoollist2211 என்ற இணைய முகவரியில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த 3,093 மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

 விண்ணப்பம் இந்த திட்டத்திற்கான பெற்றோரது உச்ச கட்ட வருமான வரம்பு ரூ.2½ லட்சம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கடைசி நாள் 31.12.2023. கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க கடைசி நாள் 15.1.2024. இந்த திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ - மாணவிகள் தேசிய கல்வி உதவித் தொகை தளத்தில் புதுப்பித்தல் விண்ணப்பம் என்ற இணைப்பில் சென்று கடந்த ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் பதிவு செய்து 2023-24-ம் ஆண்டிற்கான விண்ணப்பித்தை புதுப்பித்துக் கொள்ளவேண்டும். இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 -ம் வகுப்புகளில் பயிலும் மாணவ- மாணவிகள், முறையே 8 மற்றும் 10-ம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு, இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும். 

பதிவு செய்ய வேண்டும் ஆகவே 8 மற்றும் 10-ம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் புதிய பதிவில் சென்று தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பெறப்படும் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் பதிவுகளை புதிய விண்ணப்பம் என்ற இணைப்பின் கீழ் பதிவு செய்து உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து இத்திட்டத்தின் கீழ் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிந்திட https://scholarships.gov.in மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (http://socialjustice.gov.in) அணுகி கல்வி உதவித்தொகை பெற்று பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment