கனமழை காரணமாக 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, December 3, 2023

கனமழை காரணமாக 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை காரணமாக 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை மிக்ஜம் புயல் நாளை (திங்கட்கிழமை) தமிழ்நாட்டின் வட கடலோர பகுதிகளை நெருங்கி, பின்னர் தெற்கு ஆந்திராவை நோக்கி சென்று நெல்லூர்-மசூலிப்பட்டினத்துக்கு இடையே கரையை கடக்க இருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது. நாளை தமிழ்நாட்டின் வட கடலோர பகுதிகளில் புயல் நெருங்கும் என்பதால், அந்த பகுதிகளில் காற்றுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. 

அதன்படி, வட கடலோர பகுதிகளில் வரும் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் மழை, காற்றுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். இதேபோல் திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment