கனமழை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, December 5, 2023

கனமழை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு


புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று நள்ளிரவு வரை கன முதல் அதி கனமழை வரை பெய்தது. இதனால் மேற்கண்ட 4 மாவட்டங்களில் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் நடத்த இருந்த தேர்வுகளை ஒத்திவைத்தது. 

அதன் தொடர்ச்சியாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் வருகிற 9ந்தேதி (சனிக்கிழமை) வரை நடத்தப்படுவதாக இருந்த அனைத்து தேர்வுகளையும் ஒத்திவைப்பதாக, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சக்திவேல் தெரிவித்துள்ளார். அதேபோல், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 8ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை சென்னை பல்கலைக்கழகம் இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு நடத்த இருந்த தேர்வும் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக அதன் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் இளங்கோவன் வெள்ளைச்சாமி கூறினார்.

No comments:

Post a Comment