இந்திய விமான நிலையத்தில் காலி பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, January 13, 2024

இந்திய விமான நிலையத்தில் காலி பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

இந்திய விமான நிலையத்தில் காலி பணியிடங்களுக்கான தேர்வு விண்ணப்பிக்க வருகிற 26-ந்தேதி கடைசி நாள் 


இந்திய விமான நிலைய ஆணையத்தின் மூலம் நடத்தப்பட உள்ள தேர்வில் இளநிலை உதவியாளர் (தீயணைப்பு பணி), இளநிலை உதவியாளர் (அலுவலகம்), முதுநிலை உதவியாளர் (மின்னணுவியல்) மற்றும் முதுநிலை உதவியாளர் (கணக்கு) போன்ற பல்வேறு காலி பணியிடங்களுக்கு வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

இத்தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கு ரூ.1000 கட்டணமாக (பொது பிரிவினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், இதர பிரிவினர்) செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. 

இந்த தேர்வுக்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த இளைஞர்கள் அதிக அளவில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதுகுறித்த விவரங்களை www.aai.aero என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
---------------------------இதையும் படியுங்கள்----------------------------










































No comments:

Post a Comment