ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியல் மற்றும் மறுகலந்தாய்வு தொடர்பான செய்தி வெளியீடு - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, January 26, 2024

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியல் மற்றும் மறுகலந்தாய்வு தொடர்பான செய்தி வெளியீடு

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியல் மற்றும் மறுகலந்தாய்வு தொடர்பான செய்தி வெளியீடு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிக்கை எண்:10/2022, நாள்: 04.04.2022-இன் மூலம் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய உதவி பொறியாளர் (நெடுஞ்சாலைத் துறை, நீர்வளத் துறை, பொதுப்பணித் துறை, ஊர வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்), உதவி பொறியாளர் (சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்), முதலாள், தொழில் நுட்ப உதவியாளர் மற்றும் தானியங்கிப் பொறியாளர் (மோட்டார் வாகன பராமரிப்புத் துறை) பதவிகளுக்கான திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வின் மறுகலந்தாய்வு 03.022024 மற்றும் 04.022024 ஆகிய இரண்டு நாட்களில் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 

மேலும், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கு எண்.682- 687/2023 மற்றும் வழக்கு எண்.7412/2023, நாள் 20.11.2023-ல் வழங்கிய பொது இறுதியாணையின் அடிப்படையில், முன்னர் வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியல் மற்றும் அத்தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தெரிவு ஆகியவை இரத்து செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. 

மேற்கூறிய மறுகலந்தாய்வில் பங்கேற்பதற்கான குறிப்பாணை தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது; தனியாக தபால் மூலமாக அனுப்பப்படமாட்டாது எனவும், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும் எனவும், திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் மறுகலந்தாய்வில் கலந்துகொள்ள தவறும் பட்சத்தில் மறுவாய்ப்பு வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. ச.கோபால சுந்தரராஜ் இ.ஆ.ப., செயலாளர்

No comments:

Post a Comment