பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்: ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, January 24, 2024

பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்: ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- 
கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் ரேஷன்கடை பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளரின் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 

அந்த குழு வழங்கிய பரிந்துரையின்படி, பொங்கல் பண்டிகையையொட்டி, சிறப்பு சேவை திட்டமான பொங்கல் பரிசு தொகுப்பு வினியோக திட்டத்தினை செயல்படுத்திய ரேஷன்கடை பணியாளர்களுக்கு வினியோகம் மேற்கொள்ளப்பட்ட ரேஷன் அட்டைகளின் அடிப்படையில், ஒரு ரேஷன் அட்டைக்கு 50 காசு வீதம் வழங்க சம்பந்தப்பட்ட சங்கங்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி அத்தொகை ரேஷன்கடை பணியாளர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதை கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

 முதலில் அச்செலவுகள் சங்கங்களின் நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்டு, பின்னர் அச்செலவுகள் அந்த ஆண்டுக்குரிய மானியத் தொகைக்கான முன்மொழிவில் சேர்க்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment