பிராக்ரஸ் கார்டு' அரசு பள்ளிகளில் இனி கட்டாயம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, January 13, 2024

பிராக்ரஸ் கார்டு' அரசு பள்ளிகளில் இனி கட்டாயம்

-இதையும் படியுங்கள்-









































பிராக்ரஸ் கார்டு' அரசு பள்ளிகளில் இனி கட்டாயம் 

அரசு பள்ளி மாணவர்களுக்கு, வகுப்பறை செயல்பா டுகள் மற்றும் பாடத்தேர்ச்சி குறித்த 'பிராக்ரஸ்' அட்டை கட்டாயம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில், ரிப்போர்ட்' முன்பெல்லாம், கட்டாயமாக்கப்பட்டிருந்தது. போக்கில், இந்த ஒழுங்குமுறை கைவிடப்பட்டது. 

தற்போது, சில தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பாசிரியர்களின் ஆர்வத்தின் அடிப்படையிலேயே, மாண வர்களுக்கு தேர்ச்சி விபர அட்டைகள் வழங்கப்படுகின்றன. அதனால், பல மாவட்டங்களில் அரசு பள்ளி மாணவர்களின் செயல்பாடுகளை, பெற்றோர் அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், அனைத்து அரசு பள்ளிகளிலும், இந்த ஆண்டு முதல், தேர்ச்சி அட்டைகளை கட்டாயம் வழங்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. 

தேர்வு மதிப்பெண், கல்வி சார் இணை செயல்பாடுகள், வருகைப்பதிவுடன் கூடிய, 'கிரேடு' முறை இந்த அட்டைகளில் குறிப்பிடப்படும். இந்த அட்டைகளை அச்சிடுவதற்கு, 1.02 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 


No comments:

Post a Comment