டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, February 6, 2024

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. 
குரூப்-4 தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப்-4 தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை திருச்செந்தூர் சிவந்தி அகாடமி நடத்துகிறது. இந்த குரூப்-4 தேர்வானது கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் போன்ற பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வாகும். சுமார் 6,244 காலிப்பணியிடங்களை நிரப்ப நேரடி எழுத்து தேர்வுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. வருகிற ஜூன் மாதம் நடைபெறவுள்ள இந்த தேர்வுக்கு வருகிற 28-ந் தேதிக்குள் (புதன்கிழமை) www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினர் (ஓ.சி.) 18 வயது முதல் 32 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட (பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்ட (எம்.பி.சி.) பிரிவினர், எஸ்.சி.-எஸ்.டி. பிரிவினர் 18 வயது முதல் 42 வயது வரையிலும் எழுதலாம். பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்த அனைத்து பிரிவினரும் இந்த தேர்வை 60 வயது வரையிலும் எழுதலாம். 

பயிற்சி வகுப்பு டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப்-4 தேர்வுக்கான தினசரி மாலைநேர ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை திருச்செந்தூர் சிவந்தி அகாடமி நடத்துகிறது. இந்த வழிகாட்டும் பயிற்சி வகுப்புகள் வருகிற 19-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 60 நாட்கள் ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். அனுபவமிக்க வல்லுனர்களால் நடத்தப்படும் இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகளுக்கான குறிப்பேடுகள் ‘சாப்ட் காப்பி’யாக வழங்கப்படும். ஆன்லைன் பயிற்சி வகுப்பில் சேர கட்டணம் ரூ.7,500 ஆகும். 

விண்ணப்பிக்க... இந்த பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பிக்க வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும். பயிற்சி வகுப்பில் சேர விரும்புகிறவர்கள் பயிற்சி கட்டணத்தை வங்கி வரைவோலையாக (கனரா வங்கி/ இந்தியன் ஓவர்சீஸ் வங்கி/ பாரத ஸ்டேட் வங்கி/ இந்தியன் வங்கி) ‘சிவந்தி அகாடமி, திருச்செந்தூர்’ என்ற பெயரில் எடுத்து ‘சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர்-628216, தூத்துக்குடி மாவட்டம்’ என்ற முகவரிக்கு தங்களின் புகைப்படம், பெயர், பின்கோடுடன் முகவரி, இ.மெயில், வாட்ஸ்-அப் எண் போன்ற விவரங்களுடன் அனுப்ப வேண்டும். அல்லது சிவந்தி அகாடமி இணையதளத்தின் (https://sivanthiacademy.org/) மூலமாகவும் இப்பயிற்சி கட்டணத்தை செலுத்தலாம். அதன்பின்னர் பெயர் பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், வாட்ஸ்-அப் எண் போன்ற விவரங்கள் மற்றும் ஆன்லைன் கட்டண ரசீது ஆகியவற்றை சிவந்தி அகாடமியின் மின்னஞ்சல் முகவரிக்கு (sa@aei.edu.in) அனுப்ப வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பித்தரப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு 04639-242998, 8248624842, 9443178481 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் எஸ்.பிரான்சிஸ் ரெஜீலா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment