10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது! - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, April 12, 2024

10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது!

எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம் 
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கி கடந்த 8-ந்தேதியுடன் நிறைவடைந்தது. இந்த தேர்வை, மாநிலம் முழுவதும் 9.1 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். விடைத்தாள்கள், மண்டல அளவிலான சேகரிப்பு மையங்களில் பாதுகாக்கப்பட்டன. இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகின்றன. 

விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான வழிகாட்டுதல்களும் அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அரசு தேர்வுகள் இயக்கக அதிகாரிகள் கூறுகையில், ‘எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, தமிழகம் முழுவதும் 38 மையங்களில் நடைபெறுகிறது. விடைத்தாள்கள் அடுத்த 8 வேலை நாட்களில் நிறைவு செய்ய ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment