பிளஸ்-2 தேர்வு மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பம்: 2,328 மாணவர்களின் மதிப்பெண்கள் மாற்றம் கல்வித்துறை தகவல் - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, June 21, 2024

பிளஸ்-2 தேர்வு மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பம்: 2,328 மாணவர்களின் மதிப்பெண்கள் மாற்றம் கல்வித்துறை தகவல்

பிளஸ்2 தேர்வு மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பம்: 2,328 மாணவர்களின் மதிப்பெண்கள் மாற்றம் கல்வித்துறை தகவல் 
பிளஸ்2 பொதுத் தேர்வு முடிவு கடந்த 6ம்தேதி வெளியானது. இந்த தேர்வில் 7 லட்சத்து 19 ஆயிரம் மாணவமாணவிகள் தேர்ச்சி பெற்று இருந்தனர். இந்த தேர்வு முடிவில் விருப்பம் இல்லாதவர்கள், சந்தேகம் இருப்பவர்கள் மறு கூட்டல், மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்து இருந்தது. அதன்படி, விடைத்தாள் நகல் பெற 49 ஆயிரத்து 245 மாணவமாணவிகள் விண்ணப்பித்தனர். இதுதவிர விடைத்தாள் நகல் பெறாமல் மறுகூட்டலுக்கு நேரடியாக 1,540 பேர் விண்ணப்பித்து அதில் 19 மாணவர்களின் மதிப்பெண்கள் மாற்றம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதேபோல், விடைத்தாள் நகல் பெற்று பின்னர் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த 175 பேரில் 131 பேருக்கு மதிப்பெண் மாற்றம் வந்துள்ளது. இதுதவிர விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்த 3,632 மாணவமாணவிகளில், 2,178 பேரின் மதிப்பெண்களில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் பிளஸ்2 பொதுத் தேர்வு முடிவில் ஒட்டுமொத்தமாக 2,328 மாணவமாணவிகளின் மதிப்பெண்கள் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் விடைத்தாள் திருத்தும் பணியில் தவறு செய்த ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் கல்வித் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment