4 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, June 1, 2024

4 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி வகித்து வந்த மஞ்சுளா வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெற்றுள்ளார். அதேபோல், திருப்பூர் முதன்மை கல்வி அலுவலர் கீதா, அரியலூரில் விஜயலட்சுமி, பெரம்பலூரில் எஸ்.மணிவண்ணன் ஆகியோரும் ஓய்வு பெற்றிருக்கின்றனர். இந்த நிலையில், 4 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் சண்முகத்துக்கு, புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் பக்தவாச்சலத்துக்கு, திருப்பூர் முதன்மை கல்வி அலுவலராகவும், அரியலூர் மாவட்ட கல்வி அலுவலர் சுவாமி முத்தழகனுக்கு அரியலூர் முதன்மை கல்வி அலுவலராகவும், பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் அண்ணாதுரைக்கு, பெரம்பலூர் முதன்மை கல்வி அலுவலராகவும் கூடுதல் பொறுப்புகள் வழங்கி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார். அதேபோல், பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் 9 பேர் நேற்று வயது முதிர்வு காரணமாக பணி ஓய்வு பெற்றனர். அந்த பணியிடங்களில், பணியில் மூத்த உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களை நிதியதிகாரத்துடன் கூடிய முழு கூடுதல் பொறுப்புக்கு நியமனம் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment