ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு நாளை நடக்கிறது - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, June 12, 2024

ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு நாளை நடக்கிறது

தொடக்கக் கல்வியில் 31.5.2024 அன்றைய நிலவரப்படி, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் 2024 மார்ச் மாதம் நடைபெற்ற சிறப்பு மாணவர் சேர்க்கை விவரத்தை கருத்தில் கொண்டு உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் பட்டியல் எடுக்கப்பட்டன. 

அதன்படி, 1,862 பணியிடங்கள் ஆசிரியருடன் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டது. இந்த இடங்களுக்கு முதல்கட்டமாக ஒன்றியத்துக்குள் மட்டும் பணிநிரவல் மாறுதல் கலந்தாய்வு நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. ஒன்றியத்துக்குள் பணிநிரவல் மாறுதல் வழங்கப்பட்டு மீதமுள்ள பணியிடங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஆசிரியர் தகுதித் தேர்வு சார்ந்த வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டு ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படும். 

அது முடிந்த பின்பு உள்ள காலிப் பணியிடங்களில் 2-ம் மற்றும் இறுதிக்கட்டமாக பணிநிரவல் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும் என தொடக்கக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment