இடைநிலை ஆசிரியர் தேர்வு தள்ளிவைப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, June 12, 2024

இடைநிலை ஆசிரியர் தேர்வு தள்ளிவைப்பு

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 1,768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டது. 
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசமும் வழங்கப்பட்டன. அதன்படி, 26 ஆயிரத்து 510 பேர் இந்த பணியிடங்களுக்காக விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கான தேர்வு வருகிற 23-ந்தேதி நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘23-ந்தேதி நடைபெற இருந்த இடைநிலை ஆசிரியர் தேர்வு நிர்வாக காரணங்களுக்காக தள்ளிவைக்கப்படுகிறது. இந்த தேர்வானது அடுத்த மாதம் (ஜூலை) 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும்' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment