பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் பள்ளிக்கல்வித்துறை இறுதி வாய்ப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, June 9, 2024

பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் பள்ளிக்கல்வித்துறை இறுதி வாய்ப்பு

அரசு தேர்வுகள் இயக்கக இயக்குனர் சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலில் திருத்தங்களை செய்ய அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், அரசு தேர்வுகள் துறை பலமுறை வாய்ப்பு வழங்கியது. திருத்தங்கள் மேற்கொள்ள பல வாய்ப்புகள் அளிக்கப்பட்ட நிலையிலும், சில பள்ளிகள் பெயர் பட்டியல்களில் திருத்தம் முழுமையாக மேற்கொள்ளவில்லை. இது, தேர்வு முடிவுகள் வெளியான பிறகும், சில பள்ளிகளில் இருந்து பெயர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள கோரிக்கைகள் வருவது மூலம் தெரிகிறது. தற்போது, பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதியாக பள்ளிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. திருத்தங்கள் இருந்தால், தலைமை ஆசிரியர்கள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் நகலில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு, அதை வருகிற 12-ந்தேதிக்குள் அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். வாய்ப்பை பயன்படுத்தாமல், மதிப்பெண் சான்றிதழ் அச்சிட்ட பிறகு, திருத்தம் செய்ய கோரிக்கை மனுக்கள் அனுப்பக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment