இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜூலை 19க்குள் விண்ணப்பிக்க அழைப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, July 18, 2024

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜூலை 19க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜூலை 19-க்குள் விண்ணப்பிக்கலாம் 

சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மிசித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்தி: சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளிகளில் காலியாகவுள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்பட உள்ளது. 

இதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இடைநிலை ஆசிரியருக்கான தற்போதைய நடைமுறையில் உள்ள அரசு விதிகளில் உள்ளவாறு பின்பற்றப்பட வேண்டும். மேலும், ஒரு காலிப்பணியிடத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கும்போது, வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும். 

இடைநிலை ஆசிரியர்கள் தெரிவுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள். பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள் அல்லது பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவர்கள் அல்லது மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள் அல்லது அருகாமை மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

தகுதியுடைய நபர்கள் சென்னை மாவட்ட ஆட்சியரகத்தின் இரண்டாம் தனத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ வெள்ளிக்கிழமை ஜூலை19) மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார் அவர்,


No comments:

Post a Comment